மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மனிதநேயமிக்கவர் - வைகோ புகழாரம்

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மிகுந்த மனிதநேயமிக்கவர் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ புகழாரம்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மனிதநேயமிக்கவர் - வைகோ புகழாரம்
Published on
மதுரை தமிழ்நாடு ஓட்டலில் நடைபெற்ற தோ்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சியில் ம.தி.மு.க பொதுச்செயலாளா் வைகோ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியல் ரீதியாக மோடியை எதிர்ப்பதும், அவர் வரும் போது கருப்பு கொடி காட்டுவதும் தமிழ்நாட்டிற்கு தான் செய்ய வேண்டிய கடமை என கூறினார். கஜா புயல் பாதிப்பின் போது மக்கள் பக்கம் நின்று கருத்து சொன்னவர் நிர்மலா சீதாராமன் மட்டுமே என கூறிய வைகோ நிர்மலா சீதாராமன் மிகுந்த மனிதநேயமிக்கவர் என புகழாரம் சூட்டினார்.
X

Thanthi TV
www.thanthitv.com