

காங்., தேசியவாத காங். தலைவர்கள் அமைச்சர்களாக பதவியேற்பு
முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிற்கு பிறகு, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சுபாஷ் தேசாய், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஜெயந்த் ராஜாராம் பாட்டீல் மற்றும் சகன் சந்திரகாந்த் புஜ்பால், காங்கிரஸ் கட்சியின் பாலாசாஹேப் தோரட் மற்றும் நிதின் ராவத் ஆகிய 6 பேருக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.