TN Govt | Supreme court | தமிழக அரசுக்கு பரபரப்பு நோட்டீஸ் விட்ட சுப்ரீம்கோர்ட்
TN Govt | Supreme court | தமிழக அரசுக்கு பரபரப்பு நோட்டீஸ் விட்ட சுப்ரீம்கோர்ட் ஆவின் முறைகேடு வழக்கு - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடர்பான ஆவின் முறைகேடு வழக்கில், ஜாமின் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வேலை வாங்கித் தருவதாக கூறி, பலரிடமிருந்து சுமார் 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், வெளிநாடு செல்ல நீதிமன்ற அனுமதி பெற வேண்டும் என்ற ஜாமின் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி அவர் உச்சநீதிமன்றத்தை அணுகினார். இந்த மனுவை, நீதிபதிகள் விசாரித்தனர். மனுவை பரிசீலித்த நீதிமன்றம், தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.
