கேரளா சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நதிநீர் பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயனுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்ட முதலமைச்சர் திருவனந்தபுரம் சென்றடைந்தார். அப்போது அவருக்கு கேரளாவில் இருக்கும் அதிமுக தொண்டர்களும், அதிகாரிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.