TN Assembly |பேரவையில் நாளுக்கு நாள்கண்கூடாக தெரியும்செம மாற்றம்..!
TN Assembly |பேரவையில் நாளுக்கு நாள்கண்கூடாக தெரியும்செம மாற்றம்..!
சட்டப்பேரவை நிகழ்வுகளைக் காண பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வம் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரில் பார்வையிட நாளுக்கு நாள் பொதுமக்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஏராளமான பள்ளி மாணவர்களும் ஆர்வத்துடன் வருகை தந்துள்ளதால், அவர்கள் பேரவை மாடத்திற்குச் செல்லும் வழியில் வரிசையாகக் காத்திருக்கின்றனர். பொதுமக்களின் வருகை பெருமளவில் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பார்வையாளர்கள் அனைவரும் உரிய கடுமையான பாதுகாப்புச் சோதனைக்குப் பின்னரே பேரவைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
