"மதத்தின் பெயரால் நடக்கும் சதி முயற்சி தான் இந்த CAA" - கொதித்தெழுந்த திருமாவளவன்

x

கால்டுவெல், ஜி.யு.போப் குறித்து ஆளுநர் ரவி தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தென்னிந்திய திருச்சபை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு ஆதரவளித்தார். தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் நேரத்தில் மதரீதியாக பிளவு ஏற்படுத்தவே சிஏஏ சட்டத்தை பாஜக அரசு அமல்படுத்தி உள்ளதாகவும், வரும் 15-ஆம் தேதி விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்