தீரன் சின்னமலை நினைவு தினம்...ஈபிஎஸ் மலர்தூவி மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது உருவ சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவரது சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com