Delimitation | "பிரதமரை மிரட்டும் தொனியில் முதலமைச்சர் பேசியிருக்கிறார்" - இந்து மக்கள் கட்சி

"பிரதமரை மிரட்டும் தொனியில் முதலமைச்சர் பேசியிருக்கிறார்" - இந்து மக்கள் கட்சி

"பிரதமரை மிரட்டும் தொனியில் முதலமைச்சர் பேசியிருக்கிறார்" - இந்து மக்கள் கட்சி வெளியிட்ட பரபரப்பு அறிக்கை #Delimitation #cmstalin #thanthitv 1950, 60களில் பார்த்த திமுகவை மீண்டும் பார்க்க வேண்டி வரும் என்று தொகுதி மறுவரையறை குறித்து கண்டனம் தெரிவித்திருந்த முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் மிரட்டும் தொனியில் பேசியிருப்பதாக, இந்து மக்கள் கட்சி வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலில் தங்களுக்குப் பலத்த அடி விழும் என்பதை உணர்ந்தே முதல்வர் ஸ்டாலின் இத்தகைய அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளது. 1962-ல் 'அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு' என்று வீர வசனம் பேசிய திமுக, மத்திய அரசு கொண்டு வந்த 16-வது அரசியல் சாசனத் திருத்தச் சட்டத்திற்குப் பயந்து, தனது பிரிவினைவாதக் கோரிக்கையைக் கைவிட்டதாக இந்து மக்கள் கட்சி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com