4வது நாளாக தொடரும் போராட்டம் - திருவோடு ஏந்தி மீனவர்கள், பெண்கள்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்கவும் வலியுறுத்தி, ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடத்தில் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நான்காவது நாளில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தை மீனவர்கள் மேற்கொண்டனர். இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com