

தம்பிதுரை குற்றச்சாட்டுக்கு ஜேட்லி விளக்கம்
தம்பிதுரையின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நிதிக் குழு பரிந்துரை அடிப்படையிலேயே பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாநிலங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதியை ஒதுக்குகிறது என்றார். ஜிஎஸ்டி சட்டப்படி மாநிலங்களுக்கு 14 சதவீத வரி வருவாய் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்றும், இலக்கை எட்டாத மாநிலங்களுக்கான இழப்பீடு அளிப்பதற்கும் ஜிஎஸ்டியில் வழிசெய்யபட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.