TN Govt | Govt Employee | அரசு ஊழியர்கள் வைத்த கோரிக்கை
சென்னையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன், ஓய்வூதிய திட்டங்கள் குறித்து அமைச்சர்கள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் கலந்து கொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
