இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக்குடியுரிமை கொடுப்பது குறித்து, இந்தியா - இலங்கை இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். சென்னை வந்துள்ள விக்னேஸ்வரனை, ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஹரிபரந்தாநன், சண்முகம், ஏ.கே. ராஜன், அக்பர் உள்ளிட்டோர் சந்தித்தனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஸ்வரன், இலக்கையில் இருந்து தமிழர்கள் வெளியேறுவதால், மக்கள் தொகை பலம் குறைந்து வருவதாக கூறினார்.