

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி முகத்தில் உள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இருநாடுகளின் வளர்ச்சி, அமைதி, பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலை சிறப்பாக நடத்த உதவிய இலங்கை மக்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.