அமலாக்கத்துறையிடம் சோனியாகாந்தி கோரிக்கை

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு, அமலாக்கத்துறைக்கு முன்பு ஆஜராக, 3 வார கால அவகாசம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, கோரிக்கை விடுத்துள்ளார்...

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு, அமலாக்கத்துறைக்கு முன்பு ஆஜராக, 3 வார கால அவகாசம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, கோரிக்கை விடுத்துள்ளார். வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேற்று ஆஜராக வேண்டும் என சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. எனினும், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சோனியாகாந்தி, அதிலிருந்து இன்னும் மீளாத நிலையில், மருத்துவர்களின் அறிவுரைப்படி கூடுதல் அவகாசம் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்