Saidai Duraisamy | Manidhanaeyam Academy | CAPF தேர்வு -மனிதநேய மையத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் வெற்றி
Saidai Duraisamy | Manidhanaeyam Academy | CAPF தேர்வு - மனிதநேய மையத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் வெற்றி
CAPF தேர்வு - மனிதநேய மையத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் வெற்றி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய மத்திய ஆயுதப்படை காவல் உதவி கமாண்டன்ட் (CAPF) தேர்வின் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், சைதை துரைசாமியின் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ் கல்வியகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் கன்னியாகுமரியைச் சேர்ந்த டிக்சன் சாமுவேல் 62-வது இடத்தையும், கோவையைச் சேர்ந்த சஞ்சய் 75-வது இடத்தையும், மயிலாடுதுறையின் பிரகாஷ் 147-வது இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும் ராணிப்பேட்டையின் ஸ்ரீநிவாஸ், திருநெல்வேலியின் சூரியராஜ் மற்றும் மதுரையைச் சேர்ந்த தங்கபாண்டி ஆகியோரும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சைதை துரைசாமி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
