இனி சனிக்கிழமையும் இயங்கும் மக்களுக்கு வெளியான குட் நியூஸ்
இனி சனிக்கிழமையும் இயங்கும் மக்களுக்கு வெளியான குட் நியூஸ்
பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, நிதியாண்டின் இறுதி மாதமான மார்ச்சில் அனைத்து சனிக்கிழமைகளிலும், ஆவண பதிவுத்துறை அலுவலகங்களும், வழக்கம் போல இயங்கும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200 முன்பதிவு வில்லைகளும் வழங்கப்படும். மேலும், விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
