தஞ்சம் தேடி தமிழகம் வந்த குடும்பம்

இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் அகதிகளாக ராமேஸ்வரத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கை முல்லை தீவைச் சேர்ந்த சிறுவர், சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரை பகுதியில் தஞ்சம் அடைந்தனர். தகவலறிந்து அப்பகுதிக்கு சென்ற மரைன் போலீசார், அகதிகளாக வந்தவர்களை மீட்டு விசாரணைக்காக மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட உள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com