

அ.தி.மு.க. உடன் உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. கூட்டணி தொடரும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு புதிய மாவட்டங்கள் பிரித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும், இதனால் அந்த மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறினார்.