Rajnath Singh | ``போருக்கு தயாராக இருங்கள்.. 5 ஆண்டுகள் வரை நடக்கலாம்’’.. முப்படைகளை அலர்ட் செய்த பாதுகாப்பு அமைச்சர்.. நாடே பகீர்

தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் நீண்ட கால போருக்கு முப்படையினரும் தயாராக வேண்டும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மத்திய பிரதேச மாநிலம் மாவ் நகரில் ராணுவ போர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், இன்றைய காலகட்டத்தில் விண்வெளியிலும், இணைய வழியிலும் போர் நடப்பதாக கூறினார். அந்த வகையில், 5 ஆண்டுகள் வரை நடக்கக்கூடிய நீண்டகால போருக்கு முப்படை தயாராக வேண்டுமென ராஜ்நாத் சிங் ஆலோசனை தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com