"போட்டியிட பயந்து ஓடிவிட்டார்" - ராகுலை கலாய்த்த மோடி

x

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடாமல் ரேபரேலி தொகுதிக்கு மாறியதை, காங்கிரஸ் நம்பிக்கையை இழந்துவிட்டது என பாஜகவினர் கேலி செய்து வருகிறார்கள். மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, தான் சொன்னது நடந்துவிட்டதாக கூறினார். காங்கிரஸ் பெரிய தலைவர் தேர்தலில் போட்டியிட பயப்படுகிறார் என கூறியிருந்தேன், இப்போது அவர் மாநிலங்களவை எம்.பியாக ராஜஸ்தான் சென்றுவிட்டார் என பிரதமர் மோடி கூறினார். இளவரசர் வயநாட்டில் தோற்பார், அங்கு தேர்தல் முடிந்த உடனேயே மற்றொரு தொகுதியை தேடி ஓடுவார் என சொல்லியிருந்தேன் என்ற பிரதமர் மோடி, அமேதியில் போட்டியிட பயந்தவர் இப்போது ரேபரேலிக்கு ஓடிவிட்டார் என கேலி செய்தார். பாஜகவை டார்கெட் செய்ய ராகுல் காந்தி எழுப்பிய அச்சப்பட வேண்டாம்... ஒளிய வேண்டாம் என்ற கோஷத்தை அவருக்கே பிரதமர் மோடி ரிப்பீட் செய்து விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்