சென்னை புழல் சிறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வந்த ஆயுள் தண்டனை கைதிகள் 67 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறைத்துறை சார்பில் பல்வேறு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன. விடுதலையான கைதிகளை அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.