Puducherry | ``மொத்தமுள்ள 30 தொகுதிகளிலும் போட்டியிட ஆசைதான்..’’ - திமுக ஸ்டாண்ட்; காங்., ஷாக்
Puducherry | ``மொத்தமுள்ள 30 தொகுதிகளிலும் போட்டியிட ஆசைதான்..’’ - திமுக ஸ்டாண்ட்; காங்., ஷாக்
Summary
புதுச்சேரி - திமுக, காங்., தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில், காங்கிரஸ் மற்றும் திமுக இடையே இழுபறி நீடிக்கிறது. தனியார் விடுதியில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு எட்டப்படவில்லை என தெரிகிறது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தங்களுக்கு 21 இடங்கள் வேண்டும் என்றும், திமுக 15 இடங்களைக் கேட்பதாகவும் தெரிவித்தார். அதேநேரம், 30 தொகுதிகளிலும் போட்டியிட தங்களுக்கு விருப்பம் இருந்தாலும், கூட்டணி என்பதால் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஜெகத்ரட்சகன் எம்.பி தெரிவித்தார்.
