"புதுச்சேரியை மத்திய அரசு புறக்கணிக்கிறது" - முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரியை மத்திய அரசு புறக்கணித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
"புதுச்சேரியை மத்திய அரசு புறக்கணிக்கிறது" - முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
Published on

புதுச்சேரியை மத்திய அரசு புறக்கணித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, 8 மாத ஊதியம் வழங்கப்படாமல் உள்ளதால் அவர்கள் போராட்டம் நடத்தி வருவதாக கூறிய நாராயணசாமி, இது தொடர்பாக கோப்புகளை அனுப்பியும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்காமல் சர்வாதிகார போக்கை காட்டுவதாக குற்றம்சாட்டினார். மேலும், புதுச்சேரி அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் துணைநிலை ஆளுநர் செயல்படுவதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com