Puducherry Election இன்னும் ஏழே நாளில் முடியும் வேட்புமனு தாக்கல் - இன்னும் ஒருவர் கூட வரவில்லையாம்
Puducherry Election இன்னும் ஏழே நாளில் முடியும் வேட்புமனு தாக்கல் - இன்னும் ஒருவர் கூட வரவில்லையாம்
புதுச்சேரி, அசாம் - முதல்நாளில் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று அசாம் , புதுச்சேரி மற்றும் கேரளாவில் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், புதுச்சேரி மற்றும் அசாமில் ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பது தெரிய வந்துள்ளது. கேரளாவின் சங்கனசேரி எனும் சட்டமன்றத் தொகுதியில் ஒருவர் மட்டும் சுயேட்சையாக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். குறிப்பிட்ட மூன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் வேட்பு மனு தாக்கல் நிறைவடைய இன்னும் 7 நாட்களே உள்ளது குறிப்பிடத்தக்கது.
