சவுதி பட்டத்து இளவரசரை சந்திக்கும் பிரதமர் மோடி - பின்னணி என்ன?
2 நாள்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சவுதி அரேபியா சென்றுள்ளார்... சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் அழைப்பை ஏற்று அங்கு சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.இந்த சந்திப்பின்போது இரு நாடுகள் இடையே பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது, முதலீடுகளை ஊக்குவிப்பது, எரிசக்தி உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சவுதிக்கு பிரதமர் மோடி செல்வது இது 3வது முறையாகும். அங்கு பிரதமர் மோடி இந்திய தொழிலாளர்களுடனும் கலந்துரையாடவுள்ளார்.... தனது பயணம் குறித்து போது வெளியிட்ட அறிக்கையில், இந்தியா மற்றும் சவுதி அரேபியாவின் வரலாற்று மற்றும் நெருக்கமான உறவை மேம்படுத்த உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Next Story
