தேமுதிக அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றிய பிரேமலதா

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தேசிய கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

அதை தொடர்ந்து, மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், பேனா மற்றும் இனிப்புகளை அவர் வழங்கினார்.

மேலும், தேமுதிக அலுவலகத்தில் கூடியிருந்த தொண்டர்களுக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்..

X

Thanthi TV
www.thanthitv.com