PM Modi | Infant | Kerala | இறந்தும் உயிர்கொடுத்த குட்டி தேவதை - மனம்விட்டு புகழ்ந்த பிரதமர்
PM Modi | Baby | Kerala | இறந்தும் உயிர்கொடுத்த குட்டி தேவதை - மனம்விட்டு புகழ்ந்த பிரதமர் #mannkibaat #pmmodi #narendramodi #kerala #baby #thanthitv மனதின் குரலில் குழந்தை ஆலினை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி தனது 131வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் கேரளாவைச் சேர்ந்த 10 மாதக் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். பிப்ரவரி 5ம் தேதி சாலை விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்தார் ஆலின்... அவரது பெற்றோர், தங்கள் துயரத்தையும் தாண்டி மகளின் கல்லீரல், 2 சிறுநீரகங்கள், இதய வால்வு மற்றும் கண்களை தானமாக வழங்கினர். இதன் மூலம் 5 குழந்தைகளுக்கு புதிய வாழ்வு கிடைத்தது. கேரளாவின் மிக இளைய உறுப்பு தானதாரர் என்ற பெருமையை ஆலின் பெற்றுள்ளார். இந்த நிலையில், ஆலின் பெற்றோரின் செயல், மனிதாபிமானத்தின் உச்சம் என பிரதமர் புகழ்ந்துரைத்துள்ளார்.
