"350 தீவிரவாதிகள் பேர் உயிரிழந்ததாக கருத்தை பரப்பியது யார் ?" - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கேள்வி

இந்திய விமானப் படை தாக்குதலை பாராட்டிய முதல் மனிதர் ராகுல் காந்தி என்றும், 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதற்கு ஆதாரம் எங்கே எனவும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
"350 தீவிரவாதிகள் பேர் உயிரிழந்ததாக கருத்தை பரப்பியது யார் ?" - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கேள்வி
Published on
சமூக வலைத்தளத்தில், கருத்து தெரிவித்துள்ள அவர், விமான தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை பற்றி கருத்து கூற இந்திய விமானபடை துணைத் தளபதி மறுத்து விட்ட நிலையில், 300 முதல் 350 பேர் உயிரிழந்தார்கள் என்ற கருத்தை பரப்பி விட்டது யார் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்திய குடிமகன் என்ற முறையில் அரசை நம்புவதாகவும், ஆனால் உலகம் நம்புவதற்கு அரசு முயற்சிக்க வேண்டும் என சிலர் சொல்வதில் என்ன தவறு எனவும் ப.சிதம்பரம் கருத்து பதிவிட்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com