Organ Donation | உயிர் பிரிந்தும் 6 பேரை வாழ வைத்த இளைஞர் - மனதை துளைக்கும் சம்பவம்
Organ Donation | உயிர் பிரிந்தும் 6 பேரை வாழ வைத்த இளைஞர் - மனதை துளைக்கும் சம்பவம்
திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவடைந்த 34 வயது இளைஞர் அருண்பாண்டியன் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. மார்ச் 19ம் தேதி விபத்தில் பலத்த காயமடைந்த அவர், 9 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து அவரது குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். கல்லீரல், இரு சிறுநீரகங்கள், கண் கருவிழி மற்றும் தோல் உள்ளிட்ட 5 உறுப்புகள் மதுரை மற்றும் திருச்சி மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டன. இந்த தானம் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
