அரசின் சாதனையை விளக்கும் சைக்கிள் பேரணி

அரசின் சாதனையை விளக்கும் சைக்கிள் பேரணி

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் வகையில் ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரையில் 2-வது நாளாக சைக்கிள் பேரணி தொடங்கியது.
Published on
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் வகையில் ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரையில் 2-வது நாளாக சைக்கிள் பேரணி தொடங்கியது. வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் பாண்டி கோயிலில் தொடங்கிய பேரணி அழகர் கோயிலில் நிறைவு பெற்றது. அங்கு கோயில் குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஜெயலலிதா பேரவையினர் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட சைக்கிள் பேரணி இன்று மாலை கப்பலூரில் நிறைவுபெற உள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com