"பெரியாரைப் பற்றி பேசிவிட்டு, இங்கு எப்படி பிரசாரம் செய்கிறீர்கள்" - நாதக வேட்பாளருக்கு கேள்வி

x

ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளரிடம், பெரியார் விவகாரத்தை முன்வைத்து திமுக பெண் நிர்வாகி ஒருவர் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு அன்னை சத்யா நகர் பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற திமுக பெண் நிர்வாகி ஒருவர், பெரியாரைப் பற்றி அவதூறாக பேசிவிட்டு, எப்படி இங்கு வந்து பிரசாரம் செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட சீதாலட்சுமியின் கணவர், இதுகுறித்து பின்னர் விவாதிக்கலாம், இது அதற்கான இடமில்லை எனக்கூறி வாக்குவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்