Nitishkumar National Anthem தேசிய கீதம் ஒலிக்கும் போது நிதிஷ்குமார் செய்த செயலால் நாடே அதிர்ச்சி

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தேசிய கீதத்தை அவமதித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. பீகாரில் நடைபெற்ற விளையாட்டு விழா ஒன்றில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது, மேடையில் இருந்த முதல்வர் நிதிஷ்குமார், அருகில் இருந்த ஐ.ஏ.ஸ். அதிகாரியிடம் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் நிதிஷ்குமாரின் உடல்நலன் குறித்து கேள்வி எழுப்பியுள்ள ஆர்.ஜே.டி. மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com