" 2026-ல் நெல்லை, பாளையங்கோட்டை அதிமுகவிற்கே" - அதிமுகவினர் கடிதம்

x

நெல்லை, பாளையங்கோட்டை ஆகிய 2 தொகுதிகளையும், 2026 தேர்தலில் அதிமுகவிற்கு ஒதுக்க வேண்டும் என அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர். அதில், நெல்லை எம்.எல்.ஏ.வும், மாநில பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன் மீது அந்த கடிதத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும், இந்த 2 தொகுதிகளை அதிமுக வேட்பாளர்களுக்கு ஒதுக்காமல் விட்டால், நெல்லையில் அதிமுக அழிந்துபோகும் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. பாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்துள்ள நிலையில், நெல்லையில் பாஜக எம்.எல்.ஏ.வான நயினார் நாகேந்திரனுக்கு எதிரான நிலைப்பாட்டில் அதிமுகவினர் உள்ளது, கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்