Nellai | Election | TN Police | வினோதமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர்
நெல்லை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர், உயிருள்ள நபரை பாடையில் படுக்க வைத்து அழைத்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சுயேச்சை வேட்பாளரான அதிசய பாண்டியன், வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, உயிருள்ள நபருக்கு வேடமிட்டு இறுதி ஊர்வலம் செல்வது போல் அழைத்து வந்தார். அவரை தடுத்து நிறுத்திய தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார், அதிசய பாண்டியன் உள்ளிட்ட ஐந்து பேரை மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக அலுவலகத்திற்குள் அனுமதித்தனர்.
