

தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவின் எந்த மூலையில் தேர்தல் நடந்தாலும் களம் காணும், தேர்தல் மன்னன் பத்மராஜன், நாங்குநேரி இடைத்தேர்தலிலும் போட்டியிடுகிறார். இதற்காக, பத்மராஜன், நாங்குநேரி தேர்தல் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர், "தந்தி டிவி"- க்கு பேட்டி அளித்த அவர், கின்னஸ் சாதனைக்காக தாம் தேர்தலில் போட்டியிடுவதாக கூறினார்.