வேளாண் பட்ஜெட்டுக்கு பிறகு மீண்டும் ஒரு ஸ்பெஷல் அறிவித்தது தமிழக அரசு
தமிழ்நாடு அரசு முதன்முதலாக பொருளாதார ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. தமிழக அரசின் 2025-26-ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கை, மார்ச் 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், முதன்முறையாக தமிழ்நாடு அரசு தனது பொருளாதார ஆய்வறிக்கையை , பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் மார்ச் 14-ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட உள்ளது. அந்த ஆய்வறிக்கையில், தமிழ்நாடு அரசின் நிதிநிலை, உள்நாட்டு உற்பத்தி, எதிர்கால நிதிநிலை உள்ளிட்டவை தொடர்பான தகவல்கள் இடம்பெறும் எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story