"சமூக நீதிக் கொள்கையை பறிகொடுக்கும் அதிமுக அரசு" - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சமூக நீதி கொள்கையை அதிமுக அரசு பறிகொடுத்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
"சமூக நீதிக் கொள்கையை பறிகொடுக்கும் அதிமுக அரசு" - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
Published on

சமூக நீதி கொள்கையை அதிமுக அரசு பறிகொடுத்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். கடலூரின்

ராமசாமி படையாச்சியார் மணி மண்டப திறப்புவிழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, "சமூகநீதிக்கு ஆபத்து ஏற்பட்டால் குரல் கொடுப்போம்" என குறிப்பிட்டார். இதை விமர்சனம் செய்துள்ள ஸ்டாலின், கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கொள்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், அவற்றை பாதுகாக்க அதிமுக அரசு முயற்சி செய்யவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். "நீட்" போன்ற தேர்வுகள் மூலம் ஏழை - ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் அதை தடுக்க முடியாத அரசு என்றும் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com