Nitesh Rana | இன்ஜினியர் மீது சேற்றை வாரி இறைத்த அமைச்சருக்கு சிறை தண்டனை
இன்ஜினியர் மீது சேற்றை வாரி இறைத்த அமைச்சருக்கு சிறை தண்டனை
#niteshrana #engineer பொறியாளர் மீது சேறு வீசிய மராட்டிய அமைச்சருக்கு சிறை தண்டனை தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் மீது சேற்றை இறைத்த வழக்கில், மகாராஷ்டிர அமைச்சர் நிதேஷ் ராணாவிற்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து சிந்துதுர்க் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது கடந்த 2019-ஆம் ஆண்டு கனகவ்லி தொகுதியில் ஆய்வுப்பணியின் போது, அதிருப்தி அடைந்த நிதேஷ் ராணா அங்கிருந்த பொறியாளர் பிரகாஷ் சேதாகர் மீது சேற்றை இறைத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி வி.எஸ்.தேஷ்முக், இது திட்டமிட்டு அவமதித்த செயல் எனக் கூறி, நிதேஷ் ராணாவிற்கு ஒரு மாத சிறை தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மற்ற குற்றச்சாட்டுகளிலிருந்து நிதேஷ் ராணா விடுவிக்கப்பட்டுள்ளார்
