அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு : பதிவாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கை ஏற்கனவே விசாரித்த அமர்வுக்கே மாற்றும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு : பதிவாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
Published on
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கை ஏற்கனவே விசாரித்த அமர்வுக்கே மாற்றும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது , இந்த வழக்கு தொடர்பாக கடந்த அமர்வில் விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு நிறைய உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதனால், நீதிபதி சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிட. உயர்நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com