"பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை" - சோனியாவை சந்தித்த பின்னர் மம்தா தகவல்

டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி ஆகியோரை அவர்களது இல்லத்தில் மம்தா சந்தித்தார்.
"பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை" - சோனியாவை சந்தித்த பின்னர் மம்தா தகவல்
Published on

பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை என, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி ஆகியோரை அவர்களது இல்லத்தில் மம்தா சந்தித்தார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்க்கொள்ளும் வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும் என்றார். அதேநேரம், மத்தியில் பா.ஜ.க. அரசு நீக்கப்பட வேண்டும் என்றும், பிரதமர் வேட்பாளர் யார் என்று யோசிக்க கூடாது என்றும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com