களத்தில் இருக்கும் 14 முக்கிய வேட்பாளர்கள்..பரபரக்கும் தேர்தல் களம்

x

வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் நாளை ஒரே கட்டமாக சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. அம்மாநிலத்தில 2 மக்களவை தொகுதிகள் உள்ள நிலையில் எம்.பி கிரண் ராஜ் ரிஜிஜூ உட்பட மொத்தம் 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 60 சட்டமன்ற தொகுதிகளில், 133 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 8 லட்சத்து 92 ஆயிரத்தி, 694 வாக்காளர்கள் உள்ள நிலையில், 2 ஆயிரத்தி 226 வாக்குச்சாவடிகள் உள்ளன. காலை 7 மணிக்கு துவங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது.இங்கு சட்டசபைக்கான வாக்கு எண்ணிக்கை மட்டும் ஜூன் 2ம் தேதி நடைபெறும்.


Next Story

மேலும் செய்திகள்