மதுக்கடைகளை மூட வழி வகை செய்யும் புதிய சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் - ராமதாஸ்

மதுக்கடைகளை மூட வழி வகை செய்யும் புதிய சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என்று பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுக்கடைகளை மூட வழி வகை செய்யும் புதிய சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் - ராமதாஸ்
Published on
மதுக்கடைகளை மூட வழி வகை செய்யும் புதிய சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என்று பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கிராமசபைகளில் வாக்கெடுப்பு நடத்தி, மதுக்கடைகளை மூடும் வகையில் புதிய சட்டம் அமைய வேண்டும் என்று வலியுறுத்தினார். முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்தால் அதை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள் என்று சுட்டிக்காட்டிய ராமதாஸ், மது விற்பனையால் தான் தமிழக அரசுக்கு லாபம் என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com