நிலங்களை பிரதமர் மோடி அபகரிக்கிறார் - மம்தா சரமாரி புகார்

பாஜக மக்களை பணத்தின் மூலம் விலைக்கு வாங்க பார்ப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புகார் கூறியுள்ளார்.
நிலங்களை பிரதமர் மோடி அபகரிக்கிறார் - மம்தா சரமாரி புகார்
Published on

பாஜக மக்களை பணத்தின் மூலம் விலைக்கு வாங்க பார்ப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புகார் கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில், வாக்கு சேகரித்த அவர், பிரதமர் மோடி நிலங்களை அபகரிக்க முயற்சிப்பதாக தெரிவித்தார். அதானி நண்பரான மோடி, அனைத்தையும் மக்களிடம் இருந்து பறித்து கொள்வார் என்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 26 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்பதை சுட்டிக்காட்டிய மம்தா பானர்ஜி, ஏன் 30 தொகுதிகளில், வெற்றி மாட்டீர்களா என கேலியாக கேள்வி எழுப்பினார். வெளியூரை சேர்ந்தவர்கள், மேற்கு வங்கத்தை ஒருபோதும் ஆளு முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com