"மோசமான நிலைமையில் கர்நாடகா.." - டி.கே.சிவகுமார் பரபரப்பு பேட்டி

x

ஒழுங்காற்றுக்குழு பரிந்துரையின்படி, காவிரியில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதை ஏற்க மறுத்துள்ள கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. இது குறித்து பேசிய கர்நாடகா துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார், தமிழகத்தைவிட கர்நாடகாவின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக கூறினார். காவிரி ஆணைய உத்தரவின்படி தற்போதைக்கு காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்துவிட சட்டவல்லுநர்கள் ஆலோசனை கூறியுள்ளதாக துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்