தேவையில்லாமல் நாட்டு மக்களை வீண் பதற்றத்திற்கு பிரதமர் மோடி உள்ளாக்கியதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். என்ன சாதனை படைத்ததாக கருதி பிரதமர் அவசர உரையாற்றினார் எனத் தெரியவில்லை எனவும் இது விஞ்ஞானிகளின் தொடர் பணி எனவும் குமாரசாமி கூறியுள்ளார். எந்த அரசு அமைந்தாலும் விஞ்ஞானிகள், தங்கள் சாதனைகளை தொடருவதாகவும், அதை தனது பெரிய சாதனையாக பிரதமர் மோடி சொல்வது தவறு எனவும் குமாரசாமி தெரிவித்தார்.