Jananayagan | Minister Srinath | அமைச்சர் ஸ்ரீநாத் செய்த நெகிழ்ச்சி செயல்

Jananayagan | Minister Srinath | அமைச்சர் ஸ்ரீநாத் செய்த நெகிழ்ச்சி செயல்

தூய்மைப் பணியாளர்களுடன் 'ஜனநாயகன்' படம் பார்த்த அமைச்சர் ஸ்ரீநாத் சென்னையில் தூய்மைப் பணியாளர்களைக் கௌரவிக்கும் வகையில் கோயம்பேடு ரோகினி திரையரங்கில் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ராம்குமார், ரேவந்த் சரண், டாக்டர் ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். முன்னதாக 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, இனிப்புகள் வழங்கிச் சிறப்பித்த அமைச்சர், அவர்களுடன் திரையரங்கில் ஒன்றாக அமர்ந்து திரைப்படத்தைக் கண்டு களித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com