AIADMK | EPS | DMK | "உடனடியாக நிறுத்த வேண்டும்.." - ஆவேசமான ஈபிஎஸ்

"உடனடியாக நிறுத்த வேண்டும்.."

AIADMK | EPS | DMK | "உடனடியாக நிறுத்த வேண்டும்.." - ஆவேசமான ஈபிஎஸ் #eps #aiadmk #edappadipalaniswamy #thanthitv தேர்தல் பிரசாரத்தில் அரசு பணியாளர்கள் - ஈ.பி.எஸ். குற்றச்சாட்டு ஊராட்சி செயலாளர்கள் மற்றும் 125 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணித்தளப் பொறுப்பாளர்கள், திமுக ஆட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய பயன்படுத்தப்படுவதாக, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஊராட்சி செயலாளர்கள்', '125 நாள் வேலை உறுதித் திட்டத்தில்' பணிபுரியும் 'பணித்தளப் பொறுப்பாளர்கள்' மற்றும் 'பணியாளர்கள்' வீடு வீடாகச் சென்று, திமுக ஆட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருவது சட்ட விரோதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சார வேலைகளில் அவர்களை ஈடுபடுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com