டாக்டர் ஆடியோ - ஆடிப்போன மொத்த சுகாதார துறை - அமைச்சர் விளக்கம்
தென்காசியில் அரசு நிகழ்ச்சிக்கு 10 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்படுவதாக ஆடியோ வெளியான விவகாரத்தில், நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார். அந்த ஆடியோவில் பேசியது யாருடைய குரல் என அறிய ஒரு சுகாதாரத்துறை இணை இயக்குனரை விசாரணைக்கு அனுப்பி இருப்பதாகவும், விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
Next Story
