நீதிமன்றத்தையும், காவல் துறையையும் தரக்குறைவாக பேசிய பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச் ராஜாவை கைது செய்ய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசால் முடியாவில்லை என்று அ.ம.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் தங்கதமிழ் செல்வன் தெரிவித்துள்ளார். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை எதிர்த்து, முதலமைச்சர் பழனிசாமியால் எதுவும் செய்ய இயலாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.