அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் வளர்மதி
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில், அதிமுக சார்பில் தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி திறந்து வைத்தார். அதிமுக ஜெயலலிதா பேரவை துணை செயலாளரும் கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற துணை தலைவருமான மணிமாறன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்களுக்கு மோர், தார்பூசனி, கிர்னி, பலா, வாழை உள்பட பழங்களை ஆயிரம் பேருக்கு முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார். அதிமுக மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன், பரங்கிமலை ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கட்ராமன், கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கீதா மணிமாறன் உள்ளிட்டோர் பழங்கள், ஜூஸ், குடை வழங்கினர்.
Next Story
